உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் இந்த விசேட கூட்டம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறண்ட காலநிலை காரணமாக நாட்டின் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய நேரடிப் பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் தடையின்றிச் சேமித்து வைத்தல் மற்றும் பொதுமக்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தைப் பாதுகாப்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது குறித்துச் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தங்களின் சாத்தியமான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் உடனடியாக வழங்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு இதன்போது உத்தரவிட்டார்.

இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் மற்றுமொரு விசேட கூட்டத்தை எதிர்வரும் சில தினங்களுக்குள் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அன்றைய தினம், எல் நினோ காலநிலை சவாலை எதிர்கொள்வதற்கான துல்லியமான செயல்முறைத் திட்டங்களைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், ஸ்ரீலங்கா மகாவலி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களுக்கு அமைச்சர்களால் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர்களான லால் காந்த மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர் பின்வருமாறு சுட்டிக்காட்டினர்.

“கடந்த காலங்களில் எற்பட்ட ‘டித்வா’ சூறாவளிப் பேரழிவு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு ஏற்பட்ட சவால்களுக்கு அரசு வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளது. அதேபோன்றே, வெளிப்புற சவாலாக உருவெடுத்துள்ள இந்த உலகளாவிய காலநிலை மாற்ற நிலைமையையும் தங்குதடையின்றிச் சிறந்த முறையில் கையாள்வதற்கான முறையான திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்திடம் காணப்படுகின்றன.” – என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0