உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கொழும்பில் முதன் முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள ‘தேசிய சாரணர் பொசன் வலயம்’ தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய சாரணர் பொசன் வலயக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முறை பொசன் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரில் இந்த ஆன்மீகப் பொசன் வலயத்தை மிக விமர்சையாக நடத்துவது குறித்தும், அதற்கான பூர்வாங்க பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்தும் இங்கு விரிவாகக் ஆராயப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தின் நேரடித் தலையீடு மற்றும் வழிகாட்டலின் கீழ், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அரச துறையினரினதும், தனியார் துறையினரினதும் முழுமையான பங்களிப்புடன் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சாரண உறுப்பினர்களின் பங்கேற்புடன் இப் பொசன் வலயம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது.

லேக்ஹவுஸ் முதல் பொலிஸ் தலைமையகம் வரை பக்திப் பரவசம்
கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் முதல் பொலிஸ் தலைமையக சந்தி வரையிலான வீதிப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த விசேட பொசன் வலயம் அமைக்கப்படவுள்ளது.

இதன்போது, பிரம்மாண்ட மின்விளக்குத் தோரணங்கள், சாரணர்களால் தயாரிக்கப்படும் வர்ண விளக்குக் கூடுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை மலையின் மாதிரிக் வடிவங்கள், பக்திப் பாடல் அரங்குகள் மற்றும் அன்னதானத் தன்சல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையேயும் ஆன்மீக எழுச்சியையும் மத நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் பல விசேட நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, அரச நிறுவனங்கள் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் டி. சி. ஜயதேவ, பௌத்த விவகார திணைக்களத்தின் ஆணையாளர் (தஹம் பாடசாலை) வசந்த குமார லியனகே, கொழும்பு மேலதிக மாவட்ட செயலாளர் எம். ஏ. எஸ். காஞ்சனா குணவர்தன, கொழும்பு பிரதேச செயலாளர் யூ. பி. எஸ். ஏ. பியதாச உள்ளிட்ட சிவில் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0