உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பாதுகாப்பு குறைபாடே உள்ளது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலானது நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட மிக மோசமான ‘பாதுகாப்பு குறைபாடு’ மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையின் விளைவே தவிர, இதன் பின்னணியில் எந்தவொரு தனிப்பட்ட ‘மகா சூத்திரதாரியும்’ கிடையாது.” -என்று பிரபல சட்டத்தரணி மைத்திரி குணரத்ன திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவதில் நிலவும் குளறுபடிகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பலவீனங்கள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்தக் கோரத் தாக்குதல் நடப்பதற்கு 21 நாள்களுக்கு முன்பே, குறிப்பிட்ட ஒரு நாளில் இவ்வாறானதொரு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்று அரச புலனாய்வுச் சேவைக்கு மிகத் துல்லியமான இரகசியத் தகவல் கிடைத்திருந்தது.

புலனாய்வுப் பிரிவினர் அந்தத் தகவலை உடனடியாகப் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பியிருந்தனர். அவர் மூலமாக அந்தக் கோப்பு அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பொலிஸ்மா அதிபர், அந்த அத்தியாவசிய முக்கியத்துவம் வாய்ந்த கோப்பை வெறும் ‘தகவலுக்காக’ எனக் குறிப்பிட்டுத் தனது கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தாரே தவிர, தேவாலயங்களையோ அல்லது பொதுமக்களையோ பாதுகாப்பதற்கான எந்தவொரு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.” – என்றார்.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தார் என்று எழும் வாதங்களை தர்க்கரீதியாக அணுகிய மைத்திரி குணரத்ன,

“சுரேஷ் சலேதான் இந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தீட்டினார் என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் கூட, சர்வதேச ரீதியாகக் கிடைத்த துல்லியமான எச்சரிக்கத் தகவல்களின் அடிப்படையில் அப்போதைய பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்திருந்தால், இந்தத் தேசியப் பேரழிவைத் தடுத்து 270 இற்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.” – என்றார்.

“தற்போதைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்துச் சுயாதீன விசாரணை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் இந்தத் தாக்குதலின் ‘மகா சூத்திரதாரி’ என அடையாளப்படுத்தப்படுபவர்கள் அரசியல் தேவைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றார்கள்.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த ஒட்டுமொத்த விவகாரமும் அதிகாரிகளின் கூட்டுப் பொறுப்பற்ற தன்மையால் நேர்ந்த ஒரு பேரழிவே என்று சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0