உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முறையற்ற பொருளாதாரக் கொள்கையால் நாடு வீழ்ச்சி – ஐக்கிய மக்கள் சக்தி விமர்சனம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“தற்போதைய அரசி முறையற்ற பொருளாதார முகாமைத்துவம், நுரைச்சோலை நிலக்கரி மோசடியினாலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் தன்னிச்சையான சட்ட அமலாக்கங்கள் காரணமாக நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது” என்று ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாணந்துறை தொகுதி அமைப்பாளர் நயனக ரங்வெல்ல இந்த விவரங்களை அம்பலப்படுத்தினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 86 பகுதிகள் காப்பகங்களாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட அறிவிப்பு முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

எமது கட்சியின் விசேட கள ஆய்வுகளின்படி 26 பகுதிகள் மாத்திரமே இதுவரை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி குறிப்பிட்ட ஏனைய காப்பகங்கள் எவை மற்றும் அவற்றின் வர்த்தமானி அறிவித்தல் இலக்கங்கள் என்ன என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டியது சுற்றுச்சூழல் அமைச்சரினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.

யானை வழித்தடங்களை விடுத்து, ஜே.வி.பி.யின் அரசியல் தேவைகளுக்கு ஏற்பவே சில தேவையற்ற பகுதிகள் வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன.

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் நாட்டுக்குப் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இருவேறு வகையான நச்சுச் சாம்பல் வெளியேற்றப்படுவதால் மின் நிலையத்தின் ஆயுட்காலமும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து நட்டஈடு வசூலிக்கப்படும் என அரசு கூறினாலும் அது வெறும் நாடகமாகவே உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் தற்போது பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ரூபாவின் மதிப்பை ஸ்திரப்படுத்துவதற்காக மத்திய வங்கி சுமார் 225 மில்லியன் டொலர்களை அவசரமாகச் சந்தைக்கு விடுவித்த போதிலும் அந்த முயற்சி முற்றாகத் தோல்வியடைந்துள்ளது.

அரசின் பொருளாதாரக் கொள்கை மீதான அவநம்பிக்கை காரணமாக பொருளாதாரம் மேலும் நலிவடைந்துள்ள சூழலில், உலகளாவிய யுத்தச் சூழல் மற்றும் சுற்றுலாத்துறை வீழ்ச்சியால் நாடு மேலும் முடங்கும் அபாயம் உள்ளது.” – என்றார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே குறித்துப் பேசுகையில் நயனக ரங்வெல்ல பின்வருமாறு குறிப்பிட்டார்:

“ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணமான காட்டுமிராண்டிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே உறுதியாக இருக்கின்றது.

எனினும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களை அநாகரிகமான முறையில் சித்திரவதை செய்வதையோ, உடல் ரீதியான ஊனங்களை ஏற்படுத்துவதையோ அல்லது பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்துவதையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டம் அதன் வழியிலேயே கிரமமாக அமல்படுத்தப்பட வேண்டும். கைதிகளுக்கு எதிரான மனிதநேயமற்ற சித்திரவதைகளை சட்ட அமலாக்கப் பிரிவினர் உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்றார்,

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0