உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கடத்தல்; சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நபர் ஒருவரைக் கடத்திச் சென்று, காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ரண்பொகுணுகம, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாரங்கஸ்பிட்டிய – கிரிந்திவெல பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த 2018 செப்டம்பர் 09ஆம் திகதி கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று திங்கட்கிழமை 08 ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்பொகுணுகம பகுதியில் வைத்து இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கி – 01, அதற்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் – 05, ரி-56 ரக தோட்டாக்கள் – 04, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் – 08, 12 போரா ரக தோட்டாக்கள் – 02 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0