உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண வீராங்கனைகள் சாதனை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில் (Browns Beach) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்குட்பட்ட அம்பன் மருதம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர்.

மாவட்ட மட்டத்தில் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி, தேசிய ரீதியிலான போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இவ்வீராங்கனைகள், தேசிய மட்டப் போட்டிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளனர்.

நடப்பு ஆண்டிலும் தேசிய ரீதியில் தங்களது முத்திரையைப் பதித்து, பிரதேசத்தின் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்த்த அம்பன் மருதம் இளைஞர் கழக வீராங்கனைகளுக்கும், அவர்களை வழிநடத்திய வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கும் சமூக ஆர்வலர்களும் விளையாட்டு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0