அதிரடி சோதனையில் சிக்கிய 75 இளைஞர்கள்.!
அம்பலாங்கொடை இடம்தோட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்களுடன் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (6) இரவு நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது கஞ்சா, ஐஸ், ஹெரோயின், ஹசிஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த இந்த விருந்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று (7) பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.