மீகொடை விபத்து – இருவர் பொலிசாரிடம் சரண்!
மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப் ரக வாகனத்தின் உரிமையாளரும், மற்றுமொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இன்று (6) காலை சட்டத்தரணி ஒருவர் ஊடாக மீகொடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.