உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பருத்தித்துறையில் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் சந்திரசேகர்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் சந்திரசேகர் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து, காணாமல் போன மீனவர்களின் உறவினர்களையும், சக கடற்தொழிலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் பின்வரும் உறுதிமொழிகளை வழங்கினார்:

காணாமல் போன மீனவர்களுக்கு வங்கிப் பாக்கிக் கடன்கள் இருக்கும் பட்சத்தில், அவற்றைச் செலுத்துவதற்குரிய அல்லது தீர்ப்பதற்குரிய உரிய நடவடிக்கைகளை அமைச்சரவை முன்னெடுக்கும்.

கடற்தொழில் படகுகள் அல்லது இயந்திரங்கள் சேதமடைந்திருந்தால், அவற்றைச் சீரமைத்துத் தருவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: காணாமல் போன மீனவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன், அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்புகளும் பெற்றுத் தரப்படும்.

“இந்த அரசாங்கமும், கடற்தொழில் அமைச்சும் எப்போதும் உங்களுடனேயே இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்று அமைச்சர் ஆறுதல் கூறினார்.

மீனவர்களின் நிலை குறித்துப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் அது குறித்துப் பேசுகையில்:

“கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்னிலங்கையில் இதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றது.

அச்சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பின்னரே, மடகாஸ்கர் பகுதியில் அந்த மீனவர்கள் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர்.

எனவே, அந்த அனுபவத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரே இந்த மீனவர்களின் நிலை குறித்து இறுதி முடிவுக்கு வர முடியும்” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

மேலும், முறையான விபரங்கள் அறியப்பட்டு இறுதி முடிவுக்கு வந்த பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்தி சார்ந்த அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் விஜய், தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0