விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளர் பிரசாத் மஞ்சு கைது!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரது ஊடகச் செயலாளர் பிரசாத் மஞ்சு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் நிதிப் பயன்பாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பிரசாத் மஞ்சுவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.