உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முதியோர் இல்லத்தில் தீ விபத்து; உரிமையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

களுத்துறை மாவட்டம், ஹொரணை – அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட அதன் உரிமையாளர் இசுரு அனுஷ்க பெரேராவை எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்ட இந்தத் தீ விபத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முதியோர் இல்ல உரிமையாளர், நேற்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியோர் இல்லத்தைச் சட்டவிரோதமாக நடத்தி வந்த இவர், டிக் டொக் மற்றும் முகநூல் ஆகிய சமூக வலைத்தளங்களில் ‘லொகு அய்யா’ அல்லது ‘இசுரு அனுஷ்க’ என்ற பெயரில் சுமார் ஒரு மில்லியன் பின் தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலமானவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தப் பாரிய தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மூவர் காணாமல்போயுள்ளனர். மேலும், கடுமையான தீக்காயங்களுக்குள்ளான 6 பேர் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0