உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

களுத்துறை மாவட்டம், ஹொரணை – அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இவ்விபத்தின் போது இல்லத்தில் இருந்த மூவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் 6 பேர் கடுமையான தீக்காயங்களுடன் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட தருணத்தில், குறித்த முதியோர் இல்லத்தினுள் ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட மொத்தம் 72 பேர் தங்கியிருந்துள்ளனர்.

தீ வேகமாகப் பரவ ஆரம்பித்ததும், உடனடியாக விரைந்து செயற்பட்ட பிரதேச மக்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இல்லத்தினுள் சிக்கியிருந்த 51 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தற்போது தற்காலிகப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கான அவசரத் தேவைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, திடீரென ஏற்பட்ட இந்தத் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து அங்குருவத்தோட்ட பொலிஸாரும், விசேட தடயவியல் பொலிஸ் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ஹொரணை வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போயுள்ள மூவரையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0