உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

திசைகாட்டி அரசு ஒருபோதும் கவிழாது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், ஆட்சி கவிழப்போகின்றது என்றும் எதிரணிகள் திட்டமிட்ட பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தற்போதைய அரசு மிகவும் ஸ்திரமான நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்தது போன்று தற்போதைய அரசும் கவிழும் என்றும் எதிரணி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்ததாவது,
“கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் என எதிரணிகள் முதலில் கூறின. அது நடக்காமல் போனதும், பின்னர் மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடையும் எனப் பிரச்சாரம் செய்தன. இவ்வாறு அடுத்தடுத்து மாதங்களைக் குறிப்பிட்டுக்கொண்டு எதிரணி உறுப்பினர்கள் போலி அரசியல் நடத்தி வருகின்றனர்.

தமக்கு எஞ்சியுள்ள கட்சியின் ஆதரவாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், தங்களின் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் மட்டுமே நாடு வீழும், அரசு கவிழும் என்றெல்லாம் கதைகளை சோடித்துக் கூறி வருகின்றனர்.

எதிரணியினரால் ‘திருடர்களைப் பிடிப்போம், ஊழல்களை ஒழிப்போம், மக்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்குவோம்’ என்று மேடைகளில் கூற முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். அதனால்தான், பொருளாதார வீழ்ச்சி பற்றிப் பேசி, மாதங்களைக் கணக்குக் காட்டி நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

இதுதான் அவர்களின் தற்போதைய அரசியல் பாணி. அதற்கு நாம் வழிவிடுவோம், அது பற்றி நாம் எவ்விதத்திலும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0