நெல்லியடியில் போதை விழிப்புணர்வு பேரணி..!
நெல்லியடி சமுர்த்தி வங்கியால் போதை மற்றும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று காலை 9:00 மணியளவில் நடத்தப்பட்டது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள்
மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெல்லியடி சமுர்த்தி வங்கியிலிருந்து வங்கி முகாமையாளர் விஜயந்தினி தலைமையில் பேரணி ஆரம்பமாகி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் நிறைவடைந்தது.
அங்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளர் உமாமகள் மணிவண்ணன் தலைமையில் விழிப்புணர்வு கருத்துரைகள் இடம்பெற்றன.
குறித்த பேரணியில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டு சபை நிர்வாகிகள், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


