உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

களுத்துறை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் கைது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

களுத்துறை, வெட்டுமகடை பள்ளிவாசல் வீதிப் பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிசாருக்கு கிடைத்த விசேட புலனாய்வுத் தகவல்களின்படி, பயாகல – மெஹிமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சம்பத் குமாரதுங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில் ‘போஞ்சியா’ என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவர் ஆவார்.

இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது முதல் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதன் ஒரு கட்டமாக, மாளிகாவத்தை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராத் தரவுகளை விரிவாகப் பகுப்பாய்வு செய்தனர்.

இதன் போது கிடைத்த துல்லியமான இரகசியத் தகவலின் அடிப்படையில், மாளிகாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வேளையிலேயே களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்தச் சந்தேக நபரை அதிரடியாக வளைத்துப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ‘போஞ்சியா’ எனப்படும் சம்பத் குமாரதுங்க, இதற்கு முன்னரும் பல தடவைகள் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த ஒருவராவார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேக நபரை இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இக்கொலையின் பின்னணியிலுள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதற்காக அவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

37 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

61 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0