ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்
2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் பருத்தித்துறை பகுதியில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் ஈகைச்சுடர் ஏற்றிவைக்க மாவீரரின் சகோதரரான சி.வேந்தன் மலர் மாலை அணிவித்தத்தை தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்ட அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவுரைகளை சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் உறுப்பினரும், ஊடகவியலாளருமான சி. த.காண்டீபன், மாவீரரின் சகோதரனும் அரசியல் செயற்பாட்டாளருமான சி. வேந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இதில் பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன், நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ. முரளிதரன் உட்பட அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் குடத்தனை வடக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி, சமூக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்