மானிப்பாய் மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ஆரம்பம்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான மூன்றாவது துடுப்பாட்ட போட்டியானது மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
சம்பிரதாய முறைப்படி விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு பின்னர் துடுப்பாட்டப் போட்டியானது ஆரம்பமாகியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்ய, மானிப்பாய் இந்துக் கல்லூரி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இரண்டாவது நாள் போட்டியானது இன்று இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர் பரிசளிப்பு வைபவமும் இடம்பெறும்.
நேற்றைய போட்டியில் பாடசாலை அதிபர்கள், விருந்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.



