உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

ஒன்பது வருடங்களுக்கு பின்னர் கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலொன்று  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் கல்வி அமைச்சின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், கத்தோலிக்க மதத்தைப் போதிப்பதற்கான ஆசிரியர் பணியாடல் முறைமையொன்றை உருவாக்குவது குறித்தும், ஆசிரியர் சேவைக்காக கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் அருட்சகோதரிகளை இணைத்துக்கொள்வதன் அவசியம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையுடனான இத்தகைய கலந்துரையாடல்களை வருடத்திற்கு மூன்று முறை நடத்துவதற்கும், இதற்கான செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகேவை நியமிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட ஆயர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மதகுருமார்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தத்தமது மதத்தைக் கற்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதும், கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதுமே தனது எதிர்பார்ப்பு என கர்தினால் மெல்கம் ரஞ்சித் இங்கு மேலும் வலியுறுத்தியதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0