உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

டிட்வா சூறாவளி அனர்த்த நிவாரண நிதியிலிருந்து கையூட்டல் பெற்ற இருவருக்கு விளக்கமறியல்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

பெண் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை கையூட்டலாகப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவரும் பெல்வத்தை சீனி ஆலையின் ஊழியர் ஒருவரும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாகப் பாரியளவில் சேதமடைந்த வீடு ஒன்றுக்காக, அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபா நிவாரண நிதி அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதியை விடுவிப்பதற்காகவே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இவர்கள் இருவரும் கையூட்டல் கோரியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுச் சேதத்திற்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 50 இலட்சம் ரூபாவில், முதற்கட்ட தவணையாக 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி 20 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வழங்கப்பட்ட முதற்கட்ட நிதியிலிருந்தே சந்தேக நபர்கள் இருவரும் 10 இலட்சம் ரூபாவை கையூட்டலாகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதுமட்டுமன்றி, வருங்காலத்தில் அரசாங்கத்தால் விடுவிக்கப்படவிருந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தவணை நிதிகளை எவ்வித தடையுமின்றி விடுவிப்பதற்கும், தலா 5 இலட்சம் ரூபா வீதம் (மேலும் 10 இலட்சம் ரூபா) கையூட்டலாகப் வழங்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்திருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து அம்பலமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

54 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

52 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0