ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழுவிற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன தலைமையில் இக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமல் சில்வா, பிரண்டன் குருப்பு, வருண வராகொட மற்றும் வனேசா டி சில்வா ஆகியோர் இக் குழுவின் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.