உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 வயதான சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரண்டு ஆண் பயணிகளுமே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் நேற்று மாலை 19 ஆம் திகதி விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது இடைமறிக்கப்பட்டனர்.

அந்தக் குழுவினர், சீனாவின் ஷாங்காயிலிருந்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU-6017 மூலம் நேற்று மாலை 6.43 மணிக்கு இலங்கை வந்தடைந்தனர். சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் ரூ. 5.14 மில்லியன் பெறுமதியான 87 மொபைல்கள் மற்றும் 140 மின்கலங்கள் மீட்கப்பட்டன.

இந்தப் பொருட்கள் இணையவழி குற்றச் செயல்களில் பயன்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

49 0 0