உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அருச்சுனா மற்றும் அநுரவை கடுமையாக சாடிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தங்களை தமிழ் தேசியம் என்று மார்தட்டி, கண்டபடி பல்கலைக்கழக மாணவர்களை விமர்சித்துக்கொண்டு திரிகின்றவர்கள் தமிழ் தேசியம் சார் போராட்டங்களிலும், நினைவேந்தல்களிலும் கலந்து கொள்கின்றார்களா எமக்கு சந்தேகமாக உள்ளது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் கனகசூரியன் கவிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியத்தை உங்களது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகின்றீர்களா என்று எமக்கு சந்தேகமாக உள்ளது. நீங்கள் தமிழ் தேசிய உணர்வார் என்றால் தமிழ் மக்களது போராட்டங்கள், நினைவேந்தல்களில் பங்கெடுங்கள். ஆனால் உங்களை அங்கு எல்லாம் காண முடிவதில்லை.

2009ற்கு பின்னர் தமிழ் – சிங்கள மக்கள் ஒன்றாக இருப்பதாக கூறுகின்ற நீங்கள் எதற்காக பௌத்த விகாரைகளை தமிழர் தாயகங்களில் நிறுவுகிறீர்கள். தையிட்டி காணி, வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை ஆகியன ஆக்கிரமிக்கப்படுகிறது. அத்துடன் திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்கிறது. கிவுல் ஓயா திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றீர்கள், அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகின்றீர்கள்.

ஏன் இவ்வாறான ஆக்கிரமிப்புகளை செய்கின்றீர்கள்? இந்த அரசானது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது தாங்கள் ஆட்சி பீடம் ஏறி 24 மணிநேரத்துக்குள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதாக. எங்கு விடுதலை செய்தீர்கள்? 10பேர் இப்போதும் துன்பத்துடன் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டோரது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நேற்றுகூட ஒரு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாயார் உயிரிழந்துள்ளார். சிங்கள மக்களுக்கு இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நீங்கள் பொறுமையாக இருப்பீர்களா?

உரிமைக்காக போராடுகின்ற மாணவர்களின் குரல் வளையை இந்த அரசு தொடர்ச்சியாக நசுக்குகிறது. கடந்த கால ஆட்சியாளர்களது செயற்பாட்டையே இந்த அரசும் செய்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்காத பட்சத்திலேயே எம்மால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு கொடுத்தால் நாங்கள் இந்த நாட்டில் சந்தோஷமாக வாழ முடியும் என்று அரசுக்கு கூறுகிறோம். தீர்வு தராவிட்டால் நினைவேந்தல்கள் தொடரும், போராட்டங்கள் தொடரும், எதிர்கால தலைமுறைக்கு யுத்த வடுக்கள் தொடர்பான விடயங்கள் பல்கலைக்கழக சமூகத்தால் கடத்தப்படும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

49 0 0