உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சமூக சக்தி திட்டத்தின் கீழ் 23 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களுக்கு அனுமதி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

நாட்டின் கிராமப்புற வறுமையை ஒழிக்கும் நோக்கில் அரசால் முன்னெடுக்கப்படும் “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் கீழ், இதுவரை 23 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

“சமூக சக்தி” தேசிய திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்த விசேட மீளாய்வு சந்திப்பு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் களநிலவரம் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகின.

2026 வரவு – செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 23 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாழ்வாதார மேம்பாடு, உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இதுவரை 13 ஆயிரத்து 977 சமூக அபிவிருத்தி சபைகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதற்கான பயிற்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராய்ந்த ஜனாதிபதி, “வழங்கப்படும் நிதியினால் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மேலும், தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இத்திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0