உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியுடன் இன்று காலை இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். வியட்நாமிடம் இருந்து உரம் பெறுவதற்கான இலங்கையின் கோரிக்கைக்கு வியட்நாமிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னதாக இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாமை வரவேற்பதற்காக, ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று காலை அரச வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பொலிஸ் பயிற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே சமய விழுமியங்களைப் பாதுகாத்தல் மற்றும் மத மாணவர் நலன்புரி தொடர்பான விசேட ஒப்பந்தமும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0