உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மகனைப் பறிகொடுத்துவிட்டு நீதி கேட்டால் அவமதிப்பதா?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சிறுவன் அருள் பயஸின் படுகொலைக்கு நீதி கோரி, ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற தமக்கு அவமதிப்பே மிஞ்சியது என்று அந்தச் சிறுவனின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்கள் இவ்விமர்சனங்களை முன்வைத்தனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வேலணை – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சிறுவன் அருள் பயஸ் உயிரிழந்திருந்தார். “எம் மகனின் மரணத்துக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. மாறாக, எமது குடும்பத்தினர் மீதும் பலியான சிறுவன் மீதும் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பி எங்களை அவமானப்படுத்தி வருகின்றனர்” என்று உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

சிறுவனின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்கப் பொலிஸார் கடுமையாக முயற்சிக்கின்றனர் என்றும், தங்களது அன்றாடச் செயற்பாடுகளைக் கண்காணித்து அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

இது தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திக்கக் கொழும்பு சென்றபோது, அங்குள்ள அதிகாரிகள் தங்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல் திருப்பி அனுப்பினார்கள் என்று கூறி அவர்கள் விசனம் தெரிவித்தனர்.

ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர்கள் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எமது இல்லத்துக்கு வந்து நியாயம் பெற்றுத்தருவதாகக் கூறினார். ஆனால், அதன் பின்னர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட அவர் பதிலளிப்பதில்லை. மக்கள் பிரச்சினையைக் கண்டுகொள்ளாத இவரை எப்படி மக்கள் பிரதிநிதி என்று நம்புவது?” – என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதேவேளை, “நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எமது வீட்டுக்கு வரவில்லை என்றாலும், சபையில் எமது மகனின் கொலைக்கு நியாயம் கேட்டுப் பேசியிருந்தார். அவர் செய்ததைக் கூட ஆளும் தரப்பில் இருக்கும் இளங்குமரன் செய்யவில்லை” என்றும் அவர்கள் ஒப்பிட்டுச் சாடினர்.

அநுர அரசும் இந்த விடயத்தில் பின்னடிப்பதாகக் குறிப்பிட்ட உறவினர்கள், எமது மகனின் கொலைக்கு நியாயம் கிடைக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0