உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொத்துவில் மற்றும் பானம பகுதிகளில் பாதுகாப்புக் குழுக்களின்   செயல்பாடுகள்  ஆராய்வு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பொத்துவில் பகுதியில் பொதுமக்கள்  பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பான  ஒன்றுகூடல் அண்மையில்  நடைபெற்றது.

39 கிராம அலுவலர் பிரிவுகளை  உள்ளடக்கிய பொத்துவில் மற்றும் பானம  பொலிஸ் பிரிவு  பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு குழு  உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

குறித்த கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன் போது  பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதுடன் எதிர்கால  திட்டங்கள்  குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன்  சில பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகள்  உரிய  தரத்தில் இல்லை என்பதை அவதானித்த அவர் அவற்றை மீள புனரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும்  பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஆகியோர்  பாதுகாப்புக் குழுக்களின் பிரச்சினைகளைத் தாமதமின்றித் தீர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அத்துடன் இப்பகுதிகளில் பெருகி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும்   வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து  முக்கியமாகக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

குறித்த  ஒன்றுகூடல் விழிப்புணர்வு நிகழ்வில் பொத்துவில் பிரதேச  செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல்   மகா சங்கத்தினர்  கத்தோலிக்கப் பாதிரியார்கள்  மௌலவிகள்  அரச அதிகாரிகள் பொத்துவில் மற்றும் பானம பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும்  கிராம அலுவலர்கள் உள்ளிட்ட  பொலிஸ் அதிகாரிகளும்  கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0