உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செம்மணி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? புதிய ஸ்கேன் முடிவுகளின் பின்பே இறுதி முடிவு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? இல்லையா? என்பது, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஸ்கேன் பரிசோதனையிலேயே தீர்மானிக்கப்படும்” என்று சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.

புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் அவர், ஜி.பி.ஆர். ஸ்கேன் பரிசோதனை மற்றும் அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில்,

“கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன், சித்துப்பாத்தி இந்து மயானத்தின் ஒரு பகுதியில் ஜி.பி.ஆர். ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஸ்கேன் பரிசோதனையில் என்புத் தொகுதிகள் இருக்கலாம் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலேயே தற்போது மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஸ்கேன் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மனித என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர், ஏனைய இடங்களில் மனித எச்சங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இதற்காக மீண்டும் ஒருமுறை ஜி.பி.ஆர். ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அந்தப் புதிய பரிசோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே அகழ்வுப் பணிகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0