செம்மணி மனித புதைகுழியில்; பதின்ம வயதுடைய எலும்புக்கூடு!
செம்மணி மனித புதைகுழியின் முன்றாம் கட்டத்தின் நான்காம் நாளான இன்று 1 மனித எலும்புத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில், இன்று 30 ஆம் திகதி மூன்றாம் கட்டத்தில் எடுக்கப்பட்ட 1 எலும்புக் கூட்டுடன் , மொத்தமாக 241 மனித எலும்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 240 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
இன்று 30 ஆம் திகதி மீட்கப்பட்ட எலும்புக்கூடு பதின்ம வயதுடைய எலும்புக்கூடு என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேதினமான இன்றும் நிபுணர்கள் தமது அகழ்வு பணியை நண்பகல் 1.30 மணி தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.