உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிதி மோசடிக்கு அதிகாரிகளின் அலட்சியமே பிரதான காரணம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

“சைபர் குற்றவாளிகளுக்குத் திறைசேரி மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டமையானது, அரச அதிகாரிகளின் கடுமையான பொறுப்பற்ற செயலாகும்” என்று துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிதி மோசடி விவகாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
“குறித்த நிதி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அதிகாரிகள் குறித்து ஏற்கனவே விசேட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளில் தவறிழைத்ததாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் விரிவான விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அடுத்தகட்டக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினர் மற்றும் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

33 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

54 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

20 0 0