உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

பண்டாரகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கடந்த 21ஆம் திகதி பத்தேகொட பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 33 வயதுடைய சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபர் 05 வீடடைப்புத் திருட்டுகளுடனும், 02 சொத்துத் திருட்டுகளுடனும் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் திருடப்பட்ட சொத்துக்களின் ஒரு பகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சொத்துக்களுள் தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று, தொல்பொருள் பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குகின்றன.

இதேவேளை, திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாராவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அடலுகம பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0