உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்குக் கட்சிப் பிரமுகர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரது சமாதியிலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கலாநிதி ஜெபநேசன் அடிகளார், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நினைவுப் பேருரை நிகழ்வு ஆரம்பமானது. தந்தை செல்வாவின் உருவப்படத்துக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வின் வரவேற்புரையைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், ஆசியுரையை யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளாரும் நிகழ்த்தினர்.

தலைமையுரையைத் தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழு தலைவர் கலாநிதி ஜெபநேசன் அடிகளார் வழங்கினார்.

“சமஷ்டி முறைமையும், அரசமைப்புச் சீர்திருத்தப் பாதையும்” எனும் தலைப்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விசேட நினைவுப் பேருரையை ஆற்றினார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி தி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட புத்திஜீவிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0