உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பதிவான மாற்றம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்ததின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு 840,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.ஜனவரி 1 முதல் ஏப்ரல் 22 வரை இடம்பெற்ற காலப்பகுதியில் மொத்தமாக 840,411 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இதில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 176,465 ஆக பதிவாகியுள்ளது.அதனைத் தொடர்ந்து பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதேநேரம் ஏப்ரல் மாதம் 1 முதல் 22 வரை மட்டும் 99,777 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறைவு காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தரவுகள் குறிப்பிடுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0