உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிதிச் செயலாளர் உடனே பதவி விலக வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

“ஆஸ்திரேலிய நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்று நிதி அமைச்சின் செயலாளர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதி அவரை நீக்க வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் கூறுகையில்,
“கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்தப் பாரிய நிதி மோசடி, நான்கு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்திலேயே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வளவு காலம் இந்த விடயத்தை மூடி மறைக்க முயன்றது ஏன்? இது குறித்து ஏன் இதுவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்படவில்லை?

நிதி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்டே விசாரணைக் குழுவை அமைப்பது ‘திருடனிடமே சாவிக்கொடுத்த கதையாக’ முடியும். அரசியல் நியமனமான தற்போதைய நிதிச் செயலாளருக்கு அரச துறையில் எவ்வித அனுபவமும் இல்லை.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்றோர் விசாரணைக் குழுக்களுக்குச் சென்ற முன்னுதாரணங்கள் உள்ளன.

ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அனைத்தையும் மறைக்க முயல்கின்றனர். நிலக்கரி கொள்வனவு மோசடி விசாரணைக் குழுவிலும் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் விசாரணைக் குழுக்களின் சுயாதீனம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று பொய்யாகி வருகின்றன. உண்மையை எவ்வளவு காலம் மறைத்தாலும் அது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

68 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0