இன்று காலை தடம்புரண்ட ரயில்.!
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிகா ரயில் இன்று வெள்ளிக்கிழமை (24) காலை தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாத்துவ ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் தடம்புரண்டதன் காரணமாக இரு திசைகளிலுமான ரயில் பாதைகளும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடலோரப் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

