உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பல கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
40 பார்வைகள்

மட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில், நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளமை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீராவோடை எல்லை வீதியைச் சேர்ந்த முகம்மட் நஸீர் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி 11 முட்டைகளைத் தனது வீட்டில் அடைகாக்க வைத்துள்ளார்.

இவ்வாறு அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நேற்று 9 கோழிக் குஞ்சுகள் பொரிந்துள்ளன.

அவ்வாறு பிறந்த குஞ்சுகளில் ஒன்று, நான்கு கால்களுடன் அபூர்வமாகக் காணப்படுவதைக் கண்டு உரிமையாளர் வியப்படைந்துள்ளார்.

கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த நிலையில் காணப்படும் இந்தக் கோழிக் குஞ்சு, மற்றைய குஞ்சுகளைப் போலவே மிகவும் ஆரோக்கியமாகவுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த அழகிய மற்றும் அபூர்வமான கோழிக் குஞ்சை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் மிகவும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டுச் செல்வதாக தெரியவருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0