உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரோலினா பகுதியில் இன்று (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போதே, இன்று காலை 9:30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியை அக்குடும்பத்தின் மூத்த மகள் ஓட்டிச் சென்றுள்ளார். அவரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இருந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வட்டவளைப் பகுதியிலுள்ள வளைவு ஒன்றில் முச்சக்கர வண்டி பயணித்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முற்பட்ட வேளையில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் காயமடைந்துள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0