யாழில் அபூர்வம்; ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நேற்று (17) பதிவாகியுள்ளது.
செம்பியன்பற்று வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளம் குடும்பத்திற்கு, நேற்று நடைபெற்ற பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த செய்தி அந்தப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த நான்கு குழந்தைகளில் இரு ஆண் குழந்தைகள், இரு பெண் குழந்தைகள் அடங்குவதாக மருத்துவத் தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் (Quadruplets) பிறப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த அபூர்வ நிகழ்வையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அந்த இளம் தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.