புத்தாண்டு தினத்தில் சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!
சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை, சேருநுவர, சோமாவதிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை மகிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தமது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் இணைந்து கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போதே, இவர்கள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.
புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.