உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேர்தல் சரிவிலிருந்து மீள மக்களுடன் நெருக்கமான உறவு மிகவும் அவசியம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

“கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், நாம் மக்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (14) உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் புதிய அலுவலகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், உடுவில் பிரதேச சபை உறுப்பினர் தி. பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே. சயந்தன், ச. சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சுமந்திரனின் உரை
“மக்களுடன் நெருக்கமான உறவு அவசியம்” நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டதாவது:-

“கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், நாம் மக்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. எமது அரசியல் இலக்கு என்பது சுயாட்சியை நோக்கிய ஒரே நேர்க்கோட்டுப் பாதையில் பயணிக்கின்றது. அதேவேளை, காலவோட்டத்தில் மக்களின் ஏனைய அடிப்படைத் தேவைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.” – என்றார்.

இளையவர்கள் வேலைவாய்ப்பின்றி வெளிநாடுகளுக்குச் செல்வது கவலையளிப்பதாகவும், அரசியல் இலக்குகளுடன் சேர்த்து இளையவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பிலும் கட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தனது உரையில் தெரிவித்ததாவது,
“இந்த அலுவலகம் மக்களின் குறைகளைக் கேட்கும் இடமாக மாத்திரமன்றி, மக்களுக்கும் எமக்கும் இடையிலான நேரடித் தொடர்பை வலுப்படுத்தும் பாலமாக அமையும். மக்களின் தேவைகளை ஒன்றிணைந்து, கூட்டுணர்வுடன் பூர்த்தி செய்வதே எமது எதிர்கால இலக்காகும். எமது கட்சியும் அந்த இலக்கை நோக்கியே பயணிக்கும்.” – என்றார்.

தேர்தல் பின்னடைவுகளுக்குப் பின்னர், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் மீளவும் பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

2 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0