உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மன்னார் உயிலங்குளத்தில் இடம்பெற்ற சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் வயல் விழா.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா” இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10 மணியளவில் மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

முதலில் பாரம்பரிய விவசாய முறைகளுடன் நவீன மற்றும் நீடித்த தொழில்நுட்பங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நெல் அறுவடையான வயல் விழா இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ச.சிவசிறி, வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.செந்தில்குமார், வடமாகாண மேலதிக மாகாண விவசாய பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி அருவி வெட்டி நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து விவசாய பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தோட்டச் செய்கையையும் பார்வையிட்டதோடு, வருகை தந்த பாடசாலை மாணவர்களுக்கு தோட்டச் செய்கை தொடர்பாக விவசாய போதனாசிரியர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் விவசாய திணைக்கள அதிகாரிகள், மாவட்ட விவசாய பயிற்சி அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் விவசாயிகள், தோட்டச் செய்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

11 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

25 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0