உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கணினி குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலை வருகை தந்த 35 மற்றும் 31 வயதுடைய சீன நாட்டுத் தம்பதியினரே, விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக பொருட்களைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் சீனாவிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களது பயணப் பொதிகளிலிருந்து 84 பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் கையடக்கத் தொலைபேசிகள், 10,000 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் 40 கிலோகிராம் சீனப் பாக்கு என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சீனப் பிரஜைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பொலிஸாரின் விசேட விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

7 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

25 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0