காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குடாஓய பொலிஸார் தெரிவித்தனர்.
எதிலிவெவ பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (01) காலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்த நபரை வெல்லவாய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை குடாஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.