உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மத்திய கிழக்கு போரைச் சாட்டி மக்களை ஏமாற்றவே வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

“மின்சாரக் கட்டணத்தைச் சடுதியாக அதிகரித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களைச் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதுல்கோட்டையிலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் 6.7 மில்லியன் மின் நுகர்வோரில் சுமார் 5.2 மில்லியன் பேர் இந்த மின்கட்டண அதிகரிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்னர் மின்சார சபையின் ஊழல்களைத் தடுத்து, கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாக உறுதியளித்த அரசாங்கம், இன்று அதற்கு மாறாக 40 வீதத்தால் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இது நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மீது சுமத்தப்பட்ட பாரிய பொருளாதாரப் பாதிப்பாகும்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் மின்கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டதாக அரசாங்கம் கூறும் காரணத்தை நாம் நிராகரிக்கின்றோம். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரியைக் கொண்டு வந்தமையே இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணமாகும். இதனால் 150 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புக்கு இழக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட அதிக விலைக்கு டீசல் மூலம் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் நட்டத்தையே தற்போது மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ளது.

உலகளாவிய நெருக்கடிகளின் போது ஏனைய நாடுகள் மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், இலங்கை அரசாங்கம் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 115 ரூபாவையும், டீசலுக்கு 91 ரூபாவையும் வரியாக அறவிடுகின்றது. எரிபொருள் விலையில் மூன்றில் ஒரு பகுதியை வரியாகப் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக அந்த வரிகளைக் குறைக்க அரசாங்கம் மறுத்து வருகின்றது.

அரசாங்கம் குறுகிய காலத்தில் 1.4 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ள போதிலும், அதனால் மக்களுக்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கோ எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் இந்த இயலாமை காரணமாக 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் நாடு இன்னும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்.” – என்று திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

43 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

59 0 0