உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

காணி அளவீடு செய்வதற்கு எதிரான போராட்டத்திற்கு த. தே. ம. மு பூரண ஆதரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
46 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவப் பயன்பாட்டிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.


எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த அளவீட்டின் மூலம், கடந்த 17 ஆண்டுகளாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 4ஆம் பட்டாலியன் மின் மற்றும் இயந்திரவியல் பிரிவுக்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை மக்களின் விருப்பத்திற்கு மாறானதாக இருப்பதாகவும், தங்கள் உரிமைகளை பாதுகாக்க போராட்டம் அவசியம் எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை அறிவித்துள்ளதுடன்சமூக ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.


மேலும், பொதுமக்களின் காணிகளை இராணுவத்திற்காக வழங்க முடியாது என்றும், சம்பந்தப்பட்ட படைகள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0