தலை மன்னாரில் பனை மரத் தோப்பில் தீ விபத்து.!
தலை மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகிலுள்ள தனியார் பனைத் தோப்பில் இன்று (31) காலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் சேதமடைந்துள்ளன. எனினும், உயிர் சேதமோ வீடுகள் அல்லது பிற சொத்துக்களுக்கு பாதிப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த தலைமன்னார் பொலிஸார், செல்வேரி இராணுவ முகாம் படையினர், கடற்படை வீரர்கள், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், தீயணைப்பு துறை மற்றும் கிராம மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் மூலம் மாலை 4.00 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், பனைமரங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.