உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தோல்விகளை மறைக்க ராஜபக்ஷக்கள் மீது பழி போடாதீர்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையில் அதிகரித்துள்ள பாதாள உலகக் குழுக்களின் அட்டூழியங்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் கட்டுப்படுத்த முடியாத அநுர அரசு, தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்க ராஜபக்ஷக்கள் மீது வீண் பழி சுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சாடியுள்ளது.

நாட்டில் பாதாள உலகக் குழுக்களும், போதைப்பொருள் மாபியாக்களும் விஸ்வரூபம் எடுக்க ராஜபக்ஷக்களின் ஆட்சியே காரணம் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை மறைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் தங்களால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாதபோது, கடந்த கால ஆட்சியாளர்களைக் கைகாட்டுவது தற்போதைய அமைச்சர்களின் வாடிக்கையாகிவிட்டது. ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் பாதாள உலகக் குழுக்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டன என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.” – என்றும் அவர் தெரிவித்தார்.

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்காரவின் கருத்துக்கள் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை எனச் சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், “பாதாள உலகத்தினரைக் கைது செய்வதற்குப் பதிலாக, அரசியல் ரீதியாக எங்களைப் பலவீனப்படுத்தவே அரசு முயற்சி செய்கின்றது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெறும் வாய்ச்சவடால்களால் மாத்திரம் பாதாள உலகத்தை ஒழிக்க முடியாது என்றும், அதற்குத் தேவையான ஆளுமையும் திட்டமிடலும் இந்த அரசிடம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“முன்னாள் ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, வீதிகளில் சுட்டுக் கொல்லப்படும் மக்களின் பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்துங்கள்.” – என்றும் அவர் பகிரங்க சவால் விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

41 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0