உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழில் இன்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் விசேட கூட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான விசேட கூட்டமொன்றை அக்கட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், நல்லூரில் நடத்துகின்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

மேற்படி கூட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-

கௌரவமான அரசியல் தீர்வு
தமிழ் மக்களுக்கு கௌரவமான மற்றும் நீதியான அரசியல் தீர்வை வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல்
நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தி, மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

மீனவர் பிரச்சினைகள்
வடக்கு கடற்பரப்பில் மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை மற்றும் வடக்கு மக்களின் வாழ்வாதார உரிமைகள் குறித்து இந்தக் கூட்டத்தின் போது ஐக்கிய சோசலிசக் கட்சி தனது தெளிவான நிலைப்பாட்டை இடித்துரைக்கவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

96 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

86 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0