உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிறைச்சாலை வன்முறையில் துப்பாக்கிப் பிரயோகம்; நீதி அமைச்சரிடம் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எவ்வித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு இன்று இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அமைச்சரிடம், அங்கு திரண்டிருந்த அதிகாரிகள் குழுவினர் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

சம்பவம் இடம்பெற்ற அன்று, மேற்படி அதிகாரி துரிதமாகச் செயற்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யாதிருந்திருந்தால், அங்கு பாரிய உயிர்ச்சேதங்களும் பெரும் பேரழிவும் ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தே அவர் தற்காப்புக்காகவும், கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கவும் துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர்கள் விளக்கமளித்தனர்.

இதன்போது, இச்சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, முறையான நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதிகாரிகளின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இச்சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் முழுமையான நீதி பெற்றுத்தரப்படும் எனவும் அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயன்றமையாலேயே இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அமைச்சின் செயலாளரின் மேற்பார்வையில், இச்சம்பவம் குறித்த உயர்மட்டக் குழு விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

29 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0