உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ரணிலுக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் 30 வரை ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அதற்கமைய, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன எனவும், அதற்கான கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன, அந்தக் கோப்புகள் மீதான சட்டமா அதிபரின் இறுதி நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.

    முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, வழக்குக்கு அடிப்படையாகக் கூறப்படும் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை வாகனங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.

    எனினும், முன்னாள் ஜனாதிபதியின் இங்கிலாந்து விஜயத்தின் போது, அவருக்கான வாகனங்களை அந்த நாட்டு அரசே வழங்கியதாக அவர் வாதிட்டார்.

    இது தொடர்பான பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ ஆவணங்களை அரச சட்டத்தரணியிடம் கையளித்த ஜனாதிபதி சட்டத்தரணி, இந்த வாகனச் செலவுகள் குறித்துத் தனியானதொரு முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்துக்கு வருகை தந்த போது, அவரது துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் அவருடன் வருகை தந்திருந்தார்.

    முன்னாள் ஜனாதிபதியின் நீதிமன்ற வருகையை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

    அத்துடன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் அங்கு குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

    காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

    22 0 0
    இலங்கை செய்திகள்

    குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

    கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

    29 0 0
    இலங்கை செய்திகள்

    இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

    நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

    67 0 0
    இலங்கை செய்திகள்

    யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

    நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

    74 0 0