கள்ள மணலுடன் சிக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் வாகனம்.!
சட்டவிரோத மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் சுரேஷ் என்பவரின் பாரவூர்தி கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்தபோது பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னரும் தனது சகபாடி பொலிஸ் மேலதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி கள்ள மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் காங்கேசன்துறை விசேட குற்றப்பிரிவு பொலிஸார் மணல் ஏற்றிய பாரவூர்தியை மறிக்க முற்பட்டபோது பொலிஸாரின் சமிக்ஞையையும் பொருட்படுத்தாது சாரதி பாரவூர்தியை ஓட்டிச் சென்றுள்ளார்.
அதனை விரட்டிச் சென்ற பொலிஸார் பாரவூர்தியை கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளனர்.
சுரேஷ் என்பவர் தலைமறைவாகியுள்ளார்.


